Thursday, February 13, 2014

கேளாய் மகளே

மானாட மயிலாட சொல்வேனடி

மணம்போல விளையாட சொல்வேனடி

தேனாக தமிழாக சொல்வேனடி

தானாக துயிலாட சொல்வேனடி



துணிவோடு மணம்பேச சொல்வேன் அடி

கனிவோடு கரம் நீட்ட சொல்வேனடி

அமுதாக உறைபேச சொல்வேனடி

விழுதாக விழிதாங்க சொல்வேனடி



குறையின்றி புகழ்வாழ சொல்வேனடி

கரையின்றி குணம்நாட சொல்வேனடி

பகையின்றி பினைவாழ சொல்வேனடி

பிறை இன்றி புவி ஆள சொல்வேனடி



பல நாடு புகுந்தாலும் சொல்வேனடி

தாய் மண்ணை துதிபாடு சொல்வேனடி

பல மொழிகள் பயின்றாலும் சொல்வேனடி

தமிழ் மொழியை கொண்டாடு சொல்வேனடி

0 Comments:

Post a Comment

<< Home