Thursday, February 20, 2014

என் காதலே - Valentine Day Spl...

காதல் காவியம் படைத்தேன் உனக்கு


கண்ணே அருகில் வாராய்

உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு

உயிரே நீயும் பாராய்



மின்னும் விழிகளின் அழகை பார்த்து

விண்மீன் மறைந்தது ஓடி

ஒளிரும் உன்முகம் இரவினில் பார்த்து

நிலவும் தோற்றது போடி



கன்னம் தோன்றிய சிவப்பினை பார்த்து

வண்டும் விரைந்தது நாடி

வண்ணம் பூசிய இதழ்களை பார்த்து

முகையும் விழுந்தது வாடி



சற்றேன்ன வளையும் புருவங்கள் சேர்த்து

பல நெத்திலி பிடித்திடலமோ

முதென்ன மின்னும் பல்தனை கோர்த்து

பொன் சங்கிலி பின்னிடலாமோ



நெற்றியில் பொலிவுடன் வட்டமாய் குங்குமம்

வண்ணத்து கோலங்கள் தானே

உச்சியில் வகிடை நிரப்பிய குங்குமம்

வைத்தது யாரது நானே



மொத்தம் அழகினை குத்தகை எடுத்தவள்

உன் உள்ளத்தின் நிறமோ வெள்ளை

இத்தகை அழகை பெற்றவர் யாரோ

உன்னிகர் உலகினில் இல்லை



இத்தனை அழகை முற்றிலும் பார்த்து

பிதென்ன திரிந்தேன் நானே

பட்டதும் உன்னை தழுவிய காற்று

இதயத்தை தொலைத்தேன் நானே



கோடையில் வாடிய சருகாய் இருந்தேன்

துளிர் காதலை புகுத்தவள் நீயே

முடியா காவியம் போல நான் இருந்தேன்

என்னை முற்றிலும் முடித்தவள் நீயே

0 Comments:

Post a Comment

<< Home